தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் மக்கள் வரலாறு (அயலவர் காலம்)
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
அறவாணன், க.ப
பதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)
Telephone : 914423744568
விலை : 200
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 304
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமலர்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : கே.சி

தமிழ் மக்கள் வரலாற்றின் மூன்றாம் தொகுதியான இந்த நூலில் வட இந்தியாவில் இருந்து வந்து பரவிய வைதிக மதம், சமண, பவுத்த மதங்களால் தமிழர் வாழ்வில் நிகழ்ந்த பதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவால் தமிழர் தம் வழிபாடு, தம் பண்பாடு, தம் மொழி ஆகியவற்றைப் பேரளவு இழத்தல், வர்ணாசிரம தருமத்தையும் ஜாதி பேதத்தையும் தமிழர் ஏற்க வேண்டிய நிலை, சமண பவுத்த மதங்களின் வீழ்ச்சி, கோவிற்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் வளர்ச்சி, வட இந்தியாவில் குப்தர்கள் காலத்தில் நடந்த பிராமணியம் தழுவிய மாற்றங்கள், பல்லவர் வழியாக தமிழகத்தில் இறக்குமதியான வரலாறு ஆகியவற்றை விரிவாகவும் உறுதியாகவும் நிறுவப்பட்டிருக்கின்றன. தமிழ்ச் சமுதாயம் காலந்தோறும் மாறி வந்த போக்கிற்கான சூழல்கள் கூடியவர் முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளன. இச்சமுதாய மாறுதல்கள் யாரால் நிகழ்ந்தன் என்று விளக்கும்போது ஆசிரியர் நடுநிலையான ஆய்வு மேற்கொண்டிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. ஆசிரியர் தலைசிறந்த கல்வியாளர்.ஆழ்ந்த புலமையும் ஆராய்ச்சித் திறனும் படைத்தவர். ஆனால் தனது புலமைக்கு ஏற்பப் பண்டித நடையில் வாசகர்களை மிரட்டாமல் அனைவருக்கும் எளிதில் புரிந்து தெளியும் பொருட்டு இந்நூலை எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. "அற நெறிகள் இக்காலத் தமிழர்களிடம் பரவாமைக்கு காரணங்கள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை (12ம் அத்தியாயம்) அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய ஒன்று. - - - 20.08.2006 - - -

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan