தமிழ்ச்
சான்றோர்களின் கருத்துக்கள், அடுத்து வரும் தலைமுறையினருக்குப் பயன்தரும் வகையில்,
அவர்களுடைய புத்தகங்களை அரசுடமையாக்கும் முயற்சியானது 1967 இல் தமிழக அரசினால்
தொடங்கப்பட்டது.
மகாகவி பாரதியின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்பட்ட நிகழ்வுடன் தொடங்கிய இம்முயற்சி
இன்றும் நடைமுறையில் உள்ளது.
கடந்த
வாரம் 2008 - 2009 நிதியாண்டிற்கான தமிழக அரசின் அரசுடமையாக்க நூல்களிற்குரிய 27
தமிழறிஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1967
முதல் 2008 வரையில் 94 அறிஞர்களின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.